2016-03-21 16:43:00

துருக்கியிலும், இரஷ்யாவிலும் உயிரிழந்தவர்களுக்கு செப உறுதி


மார்ச்,21,2016. இச்சனிக்கிழமையன்று, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்கும் திருத்தந்தையின் இரங்கல் செய்தி, அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று, துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர், 39 பேர் காயமடைந்தனர்.

மேலும், இரஷ்யாவின் Rostov-On-Don விமான தளத்தில் இடம்பெற்ற துபாய் நாட்டு விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிடும் இரங்கல் தந்தி ஒன்று இரஷ்ய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

துபாய் விமானம் ஒன்று சனிக்கிழமை காலையில் இரஷ்யாவின் Rostov-On-Don விமானத்தளத்தில் தரையிறங்க முயன்றபோது இடம்பெற்ற விபத்தில், அதில் பயணம் செய்த 55 பேர் மற்றும் 7 பணியாளர்கள் என அனைவரும் உயிரிழந்தனர். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.