2016-03-19 16:35:00

கத்தோலிக்கப் பணியாளர்களுக்கு பெலாருஸ் நாட்டின் புதிய தடைகள்


மார்ச்,19,2016. பெலாருஸ் நாட்டிற்குள் வெளிநாட்டு அருள்பணியாளர்கள் வந்து பணியாற்றுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துவருவதாக கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டு ஆயர்கள்.

இரண்டு போலந்து அருள்பணியாளர்கள் பெலாருஸ் நாட்டிற்குள் வருவதற்கு அனுமதி மறுத்துள்ள அரசு, ஏற்கனவே அந்நாட்டில் பணியாற்றும் ஒரு வெளிநாட்டு அருள்பணியாளரின் தங்கும் அனுமதியை புதுப்பிக்க மறுத்துள்ளதையுயும் சுட்டிக்காட்டும் ஆயர்கள், நாட்டின் அரசியல் விவகாரங்களில் திருஅவை தலையிடுவதாக பொய்க் குற்றச்சாட்டை அரசு முன்வைத்துள்ளது குறித்த கவலையையும் வெளியிட்டுள்ளனர்.

இரஷ்யாவோடும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையோடும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள பெலாருஸ் நாடு, பிற மதங்களுக்கு தீவிர கட்டுப்பாடுகளை விதித்துவருவதுடன், கத்தோலிக்க வானொலி நிலையம் ஒன்றை திறப்பதற்கு, திருஅவை மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் தடை விதித்துள்ளது.

ஆதாரம்: Catholic Culture/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.