2016-03-19 16:50:00

ஏமனில் அருள்சகோதரிகள் கொலையுண்ட விவரங்கள்


மார்ச்,19,2016. ஏமன் நாட்டின் ஏடன் நாகரில் 4 அருள்சகோதரிகளும் 12 உடனுழைப்பாளர்களும் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டது குறித்த முழு விவரங்கள், அப்பொடுகொலையிலிருந்து தப்பிய ஒரே அருள்சகோதரியால் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஏடன் நகரின் முதியோர் இல்லத்தில் திருப்பலியையும், காலை செபத்தையும் முடித்து, வேலைக்குத் தயாராகிக் கொண்டிருந்த அருள்கன்னியர்களை ஒவ்வோர் இடமாக தேடிக் கண்டுபிடித்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், நால்வரின் உடல்களையும் இருவர் இருவராகப் பிணைத்து, தலையில் சுட்டுக் கொன்றதுடன், அவர்களின் தலைகளையும் சிதைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இந்த அருள்கன்னியர்களை காப்பாற்ற முயன்ற எத்தியோப்பிய கிறிஸ்தவப் பணியாளர்களையும் சுட்டுக் கொன்றுள்ளனர், தீவிரவாதிகள்.

குளிர்ப்பதன அறைக்குள் ஒளிந்துகொண்ட ஓர் அருள்சகோதரியை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அங்கு திருப்பலி ஆற்ற வந்திருந்த அருள்பணி Tom Uzhunnalil அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர், இஸ்லாம் தீவிரவாதிகள்.

அன்னை தெரேசா நிறுவிய பிறரன்பு சபையின் 5 அருள்கன்னியர்களால் நடத்தப்பட்டு வந்த முதியோர் இல்லத்தில், பராமரிப்புப் பெற்றுவந்த எவரும் காயப்படுத்தப்படவில்லை. படுகொலையிலிருந்து தப்பிய அருள்சகோதரி Sally என்பவர், பாதுகாப்பு காரணமாக காவல்துறையால் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆதாரம்: Asia News/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.