2016-03-18 16:24:00

முதுபெரும் தந்தை பர்த்தலோமேயுவின் தவக்காலச் செய்தி


மார்ச்,18,2016. போர்ச்சூழலை விட்டு தப்பித்து ஓடும் புலம்பெயர்ந்தோருக்கு உதவிகள் செய்வது, இத்தவக்காலத்தில் நம்மை வந்தடைந்துள்ள அழைப்பு என்று, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களின் தவக்காலச் செய்தி கூறுகிறது.

ஜூலியன் நாள்காட்டியைப் பின்பற்றும் ஆர்த்தடாக்ஸ் சபையைச் சேர்ந்தவர்கள், மார்ச் 20, வருகிற ஞாயிறன்று தவக்காலத்தைத் துவக்கி, மேமாதம் முதல் தேதி ஞாயிறன்று, உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடவுள்ளனர்.

கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையில் இஞ்ஞாயிறு துவங்கும் தவக்காலத்திற்காக செய்தி வெளியிட்டுள்ள முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்கள், இன்றைய உலகில் புலம்பெயர்ந்தோர் எழுப்பும் வேதனைக் குரலே நமக்கு வழங்கப்பட்டுள்ள தவக்கால அழைப்பு என்று கூறியுள்ளார்.

கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தந்தை, பர்த்தலோமேயு அவர்கள் வெளியிட்டுள்ள இச்செய்தி, கிறிஸ்தவ ஒன்றிப்பு ஆர்த்தடாக்ஸ் சபையைச் சார்ந்த அனைத்து ஆலயங்களிலும், மார்ச் 20, இஞ்ஞாயிறன்று வாசிக்கப்படும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.