2016-03-15 16:56:00

பாகிஸ்தான்: போலியோவை தடுக்க மூன்றுநாள் செயல்திட்டம் துவக்கம்


மார்ச்,15,2016. பாகிஸ்தானில் உள்ள இரண்டு கோடியே 20 இலட்சத்திற்கும் அதிகமான சிறார்களுக்கு போலியோ தடுப்பூசி கொடுப்பது குறித்த மூன்று நாள் பிரச்சார நடவடிக்கை ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

இச்சிறார்களில் ஏறத்தாழ ஒரு கோடியே 80 இலட்சம் பேர் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்களாவர்.

பாகிஸ்தான் சிறார்களிடத்தில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் வெளிநாட்டு சதியே இந்த மருந்து என்று குற்றஞ்சாட்டி, தடுப்பூசி வழங்கும் அணியினர் மீது இஸ்லாமிய தீவரவாதிகள் தொடர்ந்து தாக்குதலை நடத்திவரும் நிலையில், அங்கு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்: BBC / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.