2016-03-15 16:38:00

செப்டம்பர் 4ல் அன்னை தெரேசாவுக்கு புனிதர் பட்டமளிப்பு விழா


அருளாளர் அன்னை தெரேசா புனிதராக உயர்த்தப்படும் சடங்கு, இவ்வாண்டு செப்டமபர் 4ம் தேதி, ஞாயிறன்று இடம்பெறும் என இச்செவ்வாய் காலை, கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் அறிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை தெரேசாவின் புனிதர்பட்ட அறிவிப்பு, செப்டம்பர் 4ம் தேதி இடம்பெறுவதுபோல், வரும் ஜூன் 5ம் தேதி, அருளாளர்கள் Stanislao di Gesu Maria மற்றும் Maria elisabetta Hesselblad ஆகிய இருவருக்கும், அதேவண்ணம், அக்டோபர் 16ம் தேதி Giuseppe Sanchez del Rio மற்றும் Giuseppe Gabriele del Rosario Brochero ஆகிய இருவருக்கும் புனிதர் பட்டங்கள் வழங்கப்படும் எனவும் செவ்வாய்க் கிழமையன்று அறிவிக்கப்பட்டது.

1910ம் ஆண்டு மாசெடோனியாவில் பிறந்து, தன் இளம் வயதிலிருந்தே இந்தியாவில் ஏழைகளிடையே பணியாற்றி, 1997ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி இறைபதம் சேர்ந்த அன்னை தெரேசா அவர்கள், 2003ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதியன்று புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் அருளாளராக அறிவிக்கப்பட்டார்.

அருளாளர் அன்னை தெரேசா அவர்கள், இறையடி சேர்ந்த 19ம் ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்னதாக அவரது புனிதர் பட்ட விழா நிகழ்வது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.