2016-03-14 17:12:00

வாரம் ஓர் அலசல் – அன்றாட வாழ்வில் ஆண்டவரின் இரக்கம்


மார்ச்,14,2016. எது வாழ்க்கை.. ஆயிரம் ஆயிரம் அன்றாடங்களை உள்ளடக்கியதே நம் வாழ்க்கை. வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்விக்கு மட்டுமே நாம் எல்லாரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியும். காரணம்... வாழ்க்கை குறித்த கூற்று அனுபவங்களால் மாறுபடுகின்றது. தனிமனிதச் சூழல்கள், அவை தரும் பாடங்கள் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன. வாழ்க்கை குறித்த எண்ணங்களைத் தனிப்பட்ட அனுபவப் பின்புலங்கள் வித்தியாசப்படுத்துகின்றன. இதுதான் வாழ்க்கை எனச் சொல்வோர் யாருமில்லை. என் அனுபவத்தில் இதுதான் வாழ்க்கை என ஏறக்குறைய ஓர் உத்தேசப் பதிலைத்தான் நாம் உதிர்க்க முடியும்.... இப்படி வாழ்க்கைப் பற்றி தொடங்கி, நம் ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வில் ஆண்டவரின் இரக்கம் எவ்வாறு மிளிர்கின்றது என்று உரையாற்றுகிறார் அருள்பணி அன்புநாதன், கப்புச்சின் துறவு சபை  








All the contents on this site are copyrighted ©.