2016-03-14 16:55:00

ஏழ்மையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே


மார்ச்,14,2016. உலகில் ஏழ்மையால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே என்பதை வலியுறுத்தும் நோக்கத்தில், பல புள்ளிவிவரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை, NGO ONE என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.

"ஏழ்மை என்பது, பாலின அடிப்படையில் வெளியாவது" என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ள இவ்வமைப்பு, பெண்கள், மிகப்பெரும் அளவில் துன்பங்களை அனுபவிக்கும் 20 நாடுகளையும் பட்டியலிட்டுள்ளது.

2016ம் ஆண்டில் கூட 50 கோடி பெண்கள் எழுத படிக்கத் தெரியாதவர்களாக உள்ளனர் என்றுக் கூறும் NGO ONE அமைப்பு, பெண்களை பாகுபாட்டுடன் நடத்தும் சட்டங்கள், உலகின் 155 நாடுகளில் நடைமுறையில் உள்ளன என்றும் தெரிவிக்கிறது.

உலகின் எந்த ஒரு நாட்டிலும், ஆண்களுக்கு இணையான வாய்ப்புக்கள் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை எனவும் இவ்வமைப்பு கவலையை வெளியிட்டுள்ளது.

பெண்களை மிக மோசமாக நடத்தும் 20 நாடுகளுள், சில ஆப்ரிக்க நாடுகளுடன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஹெயிட்டி, ஏமன் ஆகிய நாடுகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதாரம் : Fides/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.