2016-03-02 16:29:00

மணிலாவில் இயங்கும் EAPIயின் பொன்விழா ஆரம்பம்


மார்ச்,02,2016. பிலிப்பின்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் East Asian Pastoral Institute - EAPI என்ற பெயரில் இயங்கிவரும் கிழக்கு ஆசிய மேய்ப்புப்பணி மையம், மார்ச் 4ம் தேதி, தன் பொன்விழா கொண்டாட்டங்களைத் துவங்குகிறது.

Cubao மறைமாவட்ட ஆயர், Honesto Ongtioco அவர்களின் தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன், பொன்விழா கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின்றன.

மணிலா பேராயர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, மற்றும் மியான்மார் கர்தினால் சார்ல்ஸ் மாங் போ ஆகியோர் பங்கேற்கும் பல நிகழ்வுகள் அடுத்துவரும் மாதங்களில் நடைபெறும் என்றும், பொன்விழா கொண்டாட்டங்கள், டிசம்பர் 3, புனித பிரான்சிஸ் சேவியர் திருநாளன்று நிறைவடையும் என்றும் Fides செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

சீனாவிலிருந்து வெளியேறி, பிலிப்பின்ஸ் நாட்டில் தஞ்சம் அடைந்த சில இயேசு சபை அருள் பணியாளர்கள், இயேசு சபையின் முன்னாள் தலைவர், அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்களின் தூண்டுதலால், இந்த மையத்தைத் துவக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

2ம் வத்திக்கான் சங்கம் கொணர்ந்த புத்துணர்வு, கலாச்சாரத்தின் அடிப்படையில் ஆசிய நாடுகள் மேற்கொள்ளவேண்டிய புதிய மேய்ப்புப்பணி முயற்சிகள் ஆகியவை, இந்த மையம் உருவாக முக்கியக் காரணங்கள் என்று Fides செய்திக்குறிப்பு கூறுகிறது. 

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.