பிப்.29,2016. வருகிற மார்ச், ஏப்ரல் மாதங்களில் திருத்தந்தை தலைமையேற்று நிறைவேற்றும் திருவழிபாட்டு நிகழ்வுகள் குறித்த விவரங்களை இத்திங்களன்று வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
மார்ச் 4ம் தேதி வெள்ளி மாலை 5 மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவில், பாவமன்னிப்பு திருவழிபாட்டை நடத்தும் திருத்தந்தை, மார்ச் 6ம் தேதி முதல் 11 வரை, உரோமைக்கு அருகிலுள்ள அரிச்சாவில் ஆண்டு தியானத்தை மேற்கொள்வார்.
மார்ச் 15ல், புதிய புனிதர்களை அறிவிப்பது குறித்த கூட்டத்தை நடத்துவார். மார்ச் 20ம் தேதி குருத்தோலை ஞாயிறுடன் துவங்கும் புனித வாரத்தில், புனித வியாழன், புனித வெள்ளி, புனித சனி, மற்றும் உயிர்ப்புப் பெருவிழா திருவழிபாடுகளையும் தலைமையேற்று நடத்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏப்ரல் 3ம் தேதி, உயிர்ப்புப் பெருவிழாவிற்கு அடுத்த ஞாயிறு, திருஅவையில் சிறப்பிக்கப்படும் இறை இரக்கத்தின் ஞாயிறை முன்னிட்டு, அந்நாளிலும், அதற்கு முந்தைய நாளான சனிக்கிழமை மாலையும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இடம்பெறும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களையும் வழிநடத்துவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |