2016-02-25 14:32:00

நேர்காணல்–இரக்கத்தின் மறைப்பணியாளர்கள்–அ.பணி எஸ்.ப.செல்வம்


பிப்.25,2016. அருள்பணி எஸ்.பன்னீர் செல்வம் அவர்கள், சேலம் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர், மத்திய பிரதேச மாநிலத்தின் பச்மடி என்ற இடத்திலுள்ள, இந்திய தேசிய புதிய நற்செய்தி அறிவிப்பு மையத்தின் இயக்குனர். CCBI என்ற இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்கள் பேரவையின் நற்செய்தி அறிவிப்பு ஆணையத்தின் செயலரும் இவர். இரக்கத்தின் யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ள இரக்கத்தின் மறைப்பணியாளர்களுள் அருள்பணி எஸ்.பன்னீர் செல்வம் அவர்களும் ஒருவர். இந்த பிப்ரவரி 9ம் தேதி, உலகின் 762 இரக்கத்தின் மறைப்பணியாளர்களைச் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை. அடுத்த நாள் 10ம் தேதி திருநீற்றுப் புதனன்று இம்மறைப்பணியாளர்களுடன் சேர்ந்து திருப்பலியும் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். இரக்கத்தின் மறைப்பணியாளர்களின் பணி பற்றி இன்றைய நேர்காணலில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் அருள்பணி எஸ்.பன்னீர் செல்வம்.








All the contents on this site are copyrighted ©.