2016-02-25 15:55:00

ஐ.நா.முன்னேற்ற திட்ட அமைப்பின் 50ம் ஆண்டு நிறைவு


பிப்.25,2016. உலகச் சமுதாயத்தில் மிகவும் நலிந்தவர்களுக்கு ஐ.நா. நிறுவனத்தின் கூடுதல் அர்ப்பணிப்பு அவசியம் என்று, ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

பிப்ரவரி 24, இப்புதனன்று ஐ.நா.முன்னேற்ற திட்ட அமைப்பின் 50ம் ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் நடைபெற்ற ஒரு கூட்டத்திற்கு பான் கி மூன் அவர்கள் அனுப்பியிருந்த ஒரு காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து வளர்ந்துவரும் முன்னேற்ற முயற்சிகளுடன் ஐ.நா. முன்னேற்றத் திட்டங்களும் ஈடுகொடுக்க வேண்டும் என்று, ஐ.நா. முன்னேற்ற திட்ட அமைப்பின் (UNDP) ஒருங்கிணைப்பாளர் ஹெலன் கிளார்க் அவர்கள் கூறினார்.

வறுமைப்பட்ட 170 நாடுகளில் பணியாற்றி வரும் ஐ.நா. முன்னேற்ற திட்ட அமைப்பு, பூமிக் கோளத்தின் சக்திகளைப் பாதுகாக்கும் வகையில் முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்ளும் வழிமுறைகளை வளர்த்து வருகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.