2016-02-20 15:03:00

இது இரக்கத்தின் காலம் - மாற்றங்களை உருவாக்கும் மந்திரம்


உண்மையான அன்பு, நல்ல மாற்றங்களை உருவாக்கும் வலிமை பெற்றது என்பதை நாம் அறிவோம். அருள்பணி அந்தனி டி மெல்லோ அவர்களின் கதை இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது.

பல வழிகளிலும் பக்குவமின்றி வாழ்ந்து வந்த ஓர் இளைஞனிடம், அனைவரும்: "தம்பி, நீ மாற வேண்டும்! மாற வேண்டும்!" என்ற ஒரே கருத்தை மீண்டும், மீண்டும் இடித்துரைத்து வந்தனர். மாற வேண்டுமே என்ற கவலையில் அவர் இன்னும் மோசமாக மாறினார். அவர்மீது ஆழ்ந்த அன்புகொண்ட ஒரு பெண், ஒரு நாள், அவரிடம், "நீ உண்மையிலேயே மிக நல்லவன். நீ மாறவேண்டிய தேவையே இல்லை" என்று கூறினார். அன்று முதல் அந்த இளைஞன் மாற ஆரம்பித்தார்.

ஆயிரம் அறிவுரைகளால் மாற்றமுடியாததை, அன்பு மாற்றிவிடும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.