2016-02-08 16:36:00

டாக்கா உயர் மறைமாவட்டத்தின் புதிய துணை ஆயர்


பிப்.08,2015. பங்களாதேசின் டாக்கா உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக, அவ்வுயர் மறைமாவட்ட முதன்மை அருள் பணியாளர், ஷொரொத் பிரான்சிஸ் கோமெஸ் (Shorot Francis Gomes) அவர்களை,  இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

டாக்கா உயர் மறைமாவட்டத்தின் ஹஷ்னபாத் (Hashnabad) என்ற இடத்தில், 1965ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் கோமெஸ் அவர்கள், 1998ம் ஆண்டு முதல், 2002ம் ஆண்டு முடிய உரோம் நகரின் அல்போன்சியானம் பாப்பிறை கல்விக்கூடத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும், இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் பக்கத்தில், "புனிதக் கதவு வழியே நுழைவது என்பது, நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட வகையில் தேடிக்கொண்டிருக்கும் தந்தையாம் இறைவனின் கருணையின் ஆழத்தைக் கண்டுகொள்வதாகும்" என எழுதியுள்ளார்.

மேலும், சனிக்கிழமையன்று தைவான் நாட்டின், தைனான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இறந்தவர்களுக்கு தன் செபங்களையும், அக்குடும்பத்தினருக்கு தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து, இரங்கல் தந்தியொன்றை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.