2016-02-06 15:54:00

இளம் கலைஞர்களுக்கு திருப்பீடக் கழகங்களின் விருது


பிப்.06,2016. மனித விழுமியங்களை கிறிஸ்தவக் கண்ணோட்டத்தில் ஊக்குவிப்பதற்கு உழைக்கும் இளம் கலைஞர்களுக்கு 22 ஆயிரம் டாலர் ரொக்கப் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது திருப்பீட அவை ஒன்று.

திருப்பீடக் கழகங்களின் விருது என்ற இந்தப் பரிசை வெல்பவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டில் வத்திக்கானில் இப்பரிசை வழங்குவார்.

1542ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாப்பிறை நுண்கலை மற்றும் இலக்கிய கழகம், திருப்பீட கலாச்சார அவையின் ஒத்துழைப்புடன் இந்தப் பரிசுப் போட்டியை நடத்துகின்றது.

நுண்கலை, கட்டடக் கலை, இலக்கியம் மற்றும் இசையில் சாதனைகள் படைக்கும் தனிப்பட்ட நபர்களை அங்கீகரிக்கும் விதமாக இப்பரிசு வழங்கப்படுகிறது.

வருகிற ஏப்ரல் 30ம் தேதியன்று 25க்கும் 40வயதுக்கும் உட்பட்ட வயதை எட்டியுள்ள தனிநபர்களும், இருபது ஆண்டுகளுக்கு குறைவாக இயங்கும் நிறுவனங்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

ஆதாரம் : CNS/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.