2016-02-05 15:01:00

திருத்தந்தை - மெக்சிகோ திருத்தூதுப் பயணம் குறித்த விபரங்கள்


பிப்.05,2016. மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை மேற்கொள்ளவிருக்கும் மெக்சிகோ திருத்தூதுப் பயணம் குறித்த விபரங்களை இவ்வெள்ளியன்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டது.

வரும் வாரம் வெள்ளிக்கிழமையன்று, அதாவது, பிப்ரவரி, 12ம் தேதி, உரோமையிலிருந்து புறப்பட்டு மெக்சிகோ நகர் சென்றடைவார், திருத்தந்தை பிரான்சிஸ். மெக்சிகோவுக்குச் செல்லும் வழியில், கியூபத் தலைநகரில் இறங்கி இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை Kirill அவர்களை திருத்தந்தை சந்தித்துப் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 13ம் தேதி மெக்சிகோ அரசுத்தலைவரைச் சந்தித்து அரசு வரவேற்பைப் பெற்று, அரசு மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு உரை நிகழ்த்தும் திருத்தந்தை, மாலை 5 மணிக்கு குவாதாலூப்பே அன்னை மரியா பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றுவார்.

15ம் தேதி San Cristobal de Las Casaல், குடும்பங்களைச் சந்தித்தல், பேராலயம் செல்தல், 16ம் தேதி Moreliaவில் இளையோரைச் சந்தித்தல், 17ம் தேதி Ciudad Juarezவில் தொழிலாளரைச் சந்தித்தல் உட்பட பல பயண நிகழ்வுகளை நிறைவேற்றி, 18ம் தேதி பிற்பகல் 2.45 மணியளவில் உரோம் வந்து சேர்வார் திருத்தந்தை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.