2016-01-21 11:08:00

இது இரக்கத்தின் காலம் – கடவுளை ஏன் காண முடியவில்லை?


கடலோரத்தில் இருந்த பாறையின் இடுக்கில், ஒரு முத்து தனியாகக் கிடப்பதை, அந்தச் சிப்பி கவனித்தது. எனவே அது மிகவும் கஷ்டப்பட்டு, அந்த முத்தை எடுத்து தன் அருகில் இருந்த ஓர் இலையின் மீது வைத்தது. மனிதர்கள், முத்தை மட்டுமே விரும்புவார்கள் என்பதை சிப்பி தெரிந்து வைத்திருந்ததால், அந்த முத்தை அவர்கள் பார்த்ததும், அதனை எடுத்துக்கொண்டு தன்னை விட்டுவிடுவார்கள் என்று நினைத்தது. அங்கு வந்த மீனவர் ஒருவர், சிப்பிகளைச் சேகரிப்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தியதால், இலையின் மேல் இருந்த முத்தைக் கவனிக்காமல், முத்து இல்லாத அந்தச் சிப்பியை மட்டும் எடுத்துச் சென்றார். இலையின் மீது வைக்கப்பட்டிருந்த முத்து, மெல்ல உருண்டு சென்று பாறையின் இடுக்கில் மறுபடியும் விழுந்தது. இதைச் சொன்ன மறைந்த இயேசு சபை அருள்பணி டோனி டிமெல்லோ அவர்கள், மனிதருக்கு எங்கே பார்க்க வேண்டும் என்பது நன்றாகத் தெரியும். அதனால்தான் கடவுளைப் பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார். இரக்கத்தின் காலம், விழிப்புணர்வுடன் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கும் காலம்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.