2016-01-14 15:48:00

மன்னார் மறைமவாட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகி நியமனம்


சன.14,2016. இலங்கையின் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக பணியாற்றிவந்துள்ள ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள், பணி ஒய்வு பெற விரும்பி அனுப்பியிருந்த விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று ஏற்றுக் கொண்டார்.

75 வயது நிறைவு செய்துள்ள ஆயர் ஜோசப் அவர்களின் பணிஓய்வு விண்ணப்பத்தை, திருஅவை சட்டம் 401க்குக்  கீழ் ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, மன்னார் மறைமவாட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக, திரிகோணமலை முன்னாள் ஆயர் ஜோசப் கிங்க்ஸ்லி சுவாமிப்பிள்ளை அவர்களை நியமித்துள்ளார்.

1940ம் ஆண்டு இலங்கையில் பிறந்த இராயப்பு ஜோசப் அவர்கள், 1967ம் ஆண்டு அருள் பணியாளராகவும், 1992ம் ஆண்டு ஆயராகவும் திருநிலைப் படுத்தப்பட்டார்.

உரோம் நகர், உர்பானியா பல்கலைக் கழகத்தில் திருஅவைச் சட்டத்தில், முனைவர் பட்டம் பெற்றுள்ள இராயப்பு ஜோசப் அவர்கள், கடந்த 24 ஆண்டுகளாக மன்னார் மறைமவாட்டத்தின் ஆயராகப் பணியாற்றி வந்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.