2016-01-12 16:16:00

காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்திற்குப் புதிய துணை ஆயர்


சன.12,2016. சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தின் துணை ஆயராக அருள்பணி ஜோஸ் புளிக்கல் அவர்கள் இச்செவ்வாயன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவின் புனித தாமஸ் மவுண்டில் கூடிய, சீரோ-மலபார் வழிபாட்டுமுறை திருஅவையின் ஆயர்கள் பேரவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலின் பேரில், அருள்பணி ஜோஸ் புளிக்கல் அவர்களை, காஞ்சிரப்பள்ளி மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமித்துள்ளது.

கேரளாவின் Inchiyaniல் 1964ம் ஆண்டு பிறந்த புதிய ஆயர் ஜோஸ் புளிக்கல் அவர்கள், 1991ம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பெங்களூரு தர்மாரம் இறையியல் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், மறைக்கல்வி இயக்குனராகவும், 2014ம் ஆண்டிலிருந்து சீரோ-மலபார் வழிபாட்டுமுறை அருள்பணியாளர்களுக்குப் பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.