2016-01-12 16:41:00

Madayaவில் உடனடி மருத்துவ சிகிச்சைத் தேவையில் 400 பேர்


சன.12,2016. Madayaவில், மக்களின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்ததாய் இருக்கின்றது, மருத்துவ சிகிச்சைக்காக உடனடியாக 400 பேர் அங்கிருந்து வெளியேற வேண்டுமென்று ஐ.நா. மனிதாபிமானப் பணிகள் தலைவர் Stephen O'Brien அவர்கள் கூறினார்.

இந்நகரில் பலர் பட்டினி போடப்பட்டு இறக்கின்றனர், மற்றவர்கள் அப்பகுதியை விட்டுத் தப்பிக்க முயற்சிக்கும்போது கொல்லப்படுகின்றனர் என்று ஐ.நா. அதிகாரிகள் கூறுகின்றனர்.

கடந்த அக்டோபரிலிருந்து இந்நகர மக்கள் எந்த உதவியையுமே பெறாமல் இருக்கும்வேளை, இருபதாயிரம் பேருக்கு ஒரு மாதத்திற்குப் போதுமான உணவுப்பொருள்களை 49 வாகனங்களில் ஐ.நா. உணவு திட்ட அமைப்பு இத்திங்களன்று எடுத்துச் சென்றுள்ளது.  இவற்றைத் தொடர்ந்து, புரட்சியாளர்களின் கைவசம் உள்ள இரு நகரங்களுக்கு மற்ற வாகனங்கள் உணவுப்பொருள்களுடன் சென்றுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன. 

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.