2016-01-11 15:50:00

River blindness நோய்க்கு 2020ல் தடுப்புமருந்து தயார்


சன.11,2016. உலக அளவில் ஒரு கோடியே எழுபது இலட்சம் மக்களைப் பாதித்துள்ள River blindness என்ற ஒருவகை ஒட்டுண்ணிப் புழுவால் ஏற்படக்கூடிய கண்பார்வையிழப்பு நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து 2020ம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.

இந்நோயை உருவாக்கக்கூடிய மூன்று முக்கிய மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துள்ளதாகவும், 2020ம் ஆண்டளவில் பாதுகாப்பு சோதனைகளுக்காக இந்த நோய் தடுப்பு மருந்துகளில் ஒன்று தயாராகிவிடும் எனவும் அறிவியளாளர்கள் கூறுகின்றனர். பெரும்பாலும் ஆற்றுப் பக்கம் காணப்படும் ஒருவகை ஒட்டுண்ணிப் புழுக்களால் தொற்றக்கூடிய இந்நோயால் பாதிக்கப்படுபவரில் 90 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள்.

2025ம் ஆண்டளவில் அதன் பயன்பாடு பற்றிய சோதனைகளுக்காக இந்த மருந்து தயாராகவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நோயால் பாதிக்கப்படுபவரில் ஏறக்குறைய பத்து விழுக்காட்டினருக்கு கண்ணில் பாதிப்பும், ஒரு  விழுக்காட்டினருக்குப் பார்வையிழப்பும், எழுபது விழுக்காட்டினருக்கு கடும் தோல் நோய்களும் ஏற்படுகின்றன.

ஆதாரம் : பிபிசி /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.