2016-01-08 14:50:00

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி


சன.08,2016. “உலகம், வசதியிலும் தன்னலத்திலும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும்போது, அது, அந்த உறக்கத்திலிருந்து விழித்தெழுவதற்கு உதவ வேண்டியது நம் கிறிஸ்தவ மறைப்பணியாகும்” என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக இவ்வெள்ளியன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கு உதவுவதற்கென, வத்திக்கான் நாட்டு நிர்வாகம் நடத்தும் பரிசு சீட்டு குலுக்கலுக்கு, வருகிற பிப்ரவரி முதல் தேதி வரை பரிசு சீட்டை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வத்திக்கான் மருந்தகம், தபால் நிலையம், உணவுப்பொருள்கள் கடை, வத்திக்கான் அருங்காட்சியகத்தின் புத்தகக் கடை போன்ற இடங்களில் இந்தப் பரிசு சீட்டை பெறலாம்.

திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்கு உதவுவதற்கென நடத்தப்படும் இந்த குலுக்கல் பரிசு சீட்டு நடவடிக்கைக்கு ஆதரவளித்துள்ள அனைவருக்கும் நன்றி கூறியுள்ள அதேவேளை, இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் eventi@scv.va என்ற முகவரியோடு தொடர்பு கொள்ளலாம் என்று வத்திக்கான் நாட்டு நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுவரை இருமுறை இடம்பெற்றுள்ள இந்தப் பரிசு சீட்டு குலுக்கல், இவ்வாண்டு மூன்றாவது முறையாக நடைபெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.