2016-01-05 15:12:00

திருத்தந்தையின் திருக்காட்சி பெருவிழா திருப்பலி


சன.05,2016. திருக்காட்சி பெருவிழாவான சனவரி 06, இப்புதன் காலை பத்து மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி, பகல் 12 மணிக்கு மூவேளை செப உரை வழங்குவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், திருக்காட்சி பெருவிழாவின் விழுமியங்களை வெளிப்படுத்தும் பாரம்பரிய அணிவகுப்பும் இதே நாளில் உரோம் Conciliazione சாலையில் காலை 10.20 மணிக்குத் தொடங்கும்.

ஐரோப்பிய விடுதலைக் குடும்பங்கள் கழகத்தால் நடத்தப்படும் இந்த அணிவகுப்பில் சமூக, கலாச்சார மற்றும் விளையாட்டுக் கழகங்களின் தன்னார்வலர்கள் கலந்துகொள்வர்.

இத்தாலியின் இலத்தீனோ மாநிலத்திலுள்ள Maenza, Roccagorga, Sermoneta, Sonnino ஆகிய நகராட்சிகள் இதில் கலந்து கொள்ளும். இவற்றின் மேயர்கள், மரபு உடையணிந்த 1,300 பேர், குதிரைகள் என பல வண்ணத்தில் இந்த அணிவகுப்பு நடைபெறும். 

மேலும், சனவரி 6ம் தேதி பாலர் சபை தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.