2016-01-04 14:45:00

இறைவனின் இரக்கம் இதயங்களைத் தொட அனுமதியுங்கள்


சன.04,2016. இறைவனின் இரக்கம் இதயங்களைத் தொட்டு, அவை மாற்றம் அடைவதற்கு அனுமதிக்குமாறு இளையோரைக் கேட்டுக்கொண்டார், 2016ம் ஆண்டின் கிராக்கோவ் உலக இளையோர் தின பொது ஒருங்கிணைப்பாளர் ஆயர் Damian Muskus.

2016ம் ஆண்டு ஜூலை 26 முதல் 31ம் தேதி வரை போலந்து நாட்டின் கிராக்கோவ் நகரில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் தினத்தில் கலந்துகொள்வதற்கு தயாரித்துவரும் இளையோர்க்கென எழுதியுள்ள திறந்த கடிதத்தில் இவ்வாறு கேட்டுள்ளார் ஆயர் Muskus.

இந்த உலக இளையோர் தினத்தின் தலைப்பான, “இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் (மத். 5:7) ”என்பது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியையும் இளையோர்க்கு நினைவுபடுத்தியுள்ளார் ஆயர் Muskus. புதிய ஆண்டில், இறைவன் தம் இரக்கத்தோடு உங்கள் இதயங்களைத் தொடுவதற்கு, அவரை அனுமதியுங்கள் என்றும், இறைவனின் பிரசன்ன ஒளி உங்கள் அன்றாட வாழ்வை ஒளிரச் செய்யட்டும் என்றும் ஆயர் Muskus அவர்கள் இளையோர்க்கு எழுதியுள்ள திறந்த கடிதம் கூறுகிறது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.