2015-12-29 14:53:00

எபோலா நோய்க் கிருமி அற்ற நாடு கினி


டிச.29,2015. இரு ஆண்டுகளுக்கு முன்னர், எபோலா உயிர்க்கொல்லி நோய்க் கிருமி பரவி, கடும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்திய கினி நாடு தற்போது அந்நோய் தாக்குதல் அற்ற நாடாக மாறியுள்ளது என்று, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.

எபோலா தொற்று நோயால் தாக்கப்பட்டிருந்த கடைசி நோயாளியும் குணமாகி கடந்த நவம்பரில் மருத்துவமனையிலிருந்து வெளியேறி விட்டார்.

இந்த நல்ல செய்தியை கினி நாட்டு மக்கள், கச்சேரிகள் நடத்தி வான வேடிக்கையுடன் கொண்டாடுவர் என எதிர்பார்க்கப்படுவதாக, பிபிசி செய்தி கூறுகிறது.

மேற்கு ஆப்ரிக்க நாடான கினியில், எபோலாவால் 2,500க்கு மேற்பட்டோர் இறந்தனர். அதன் அண்டை நாடுகளான சியெரா லியோன் மற்றும் லைபீரியாவில் மேலும் ஒன்பதாயிரம் பேர் இறந்தனர்.

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.