2015-12-21 15:59:00

உலக மனித ஒருமைப்பாட்டுத் தினம்


டிச.21,2015. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 2030ம் ஆண்டின் புதிய வளர்ச்சித் திட்ட இலக்கை செயல்படுத்துவதில் தீவிரம்காட்டி அனைவருக்கும் நல்லதோர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்கு முயற்சிப்போம் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார்.

டிசம்பர் 20, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மனித ஒருமைப்பாட்டுத் தினத்திற்கென வெளியிட்ட செய்தியில் இவ்வாறு கேட்டுள்ளார் பான் கி மூன்

உலகளாவிய ஒருமைப்பாட்டுணர்வின் அடிப்படையில் மனிதரின் வளர்ச்சி மற்றும் வளமைக்கு ஒத்துழைப்பு வழங்க உலகத் தலைவர்கள் இசைவு தெரிவித்திருப்பதைக் குறிப்பிட்டுள்ள பான் கி மூன் அவர்கள், பாரிசில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தமும், இப்பூமியின் மற்றும் அதன் மக்களுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கியமான ஒரு மைல்கல் என்றும் கூறினார்

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.