2015-12-19 15:31:00

2015ல் கட்டாயமாக புலம்பெயர்ந்தவரின் எண்ணிக்கை 6 கோடி


டிச.19,2015. உலகெங்கும், தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை, இதற்கு முந்தையப் பதிவுகளைவிட, இவ்வாண்டில் அதிகமாக இருக்கும் என்று, ஐ.நா.வின் புலம்பெயர்ந்தவர் நிறுவனம் கூறியுள்ளது.

தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயர்ந்துள்ள மக்களின் எண்ணிக்கை முதன்முறையாக ஆறு கோடியை, அதாவது, உலக மக்கள் தொகையில், ஒவ்வொரு 122 பேருக்கும் ஒருவர் என்ற நிலையை எட்டியுள்ளது என்று, இந்நிறுவன உயர் இயக்குனர் António Guterres அவர்கள் தெரிவித்தார்.

2015ம் ஆண்டின் முதல் பாதிப் பகுதியை வைத்து அந்நிறுவனம் தயாரித்த புதிய அறிக்கை குறித்து இவ்வெள்ளியன்று பேசிய Guterres அவர்கள், சகிப்புத்தன்மை, பரிவன்பு மற்றும் ஒருமைப்பாட்டுணர்வு இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது என்று கூறினார்.

உலக அளவில் புலம்பெயர்ந்தவரின் எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்னர் 1 கோடியே 95 இலட்சமாக இருந்தது, ஆனால் இவ்வெண்ணிக்கை 2015ம் ஆண்டின் பாதியில் 2 கோடியைத் தாண்டியுள்ளது என்றும் கூறினார் Guterres .

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.