2015-12-18 14:53:00

கொலம்பிய ஒப்பந்தம் குறித்து, திருஅவை, ஐ.நா. நம்பிக்கை


டிச.18,2015. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் அரசுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக் குழுவுக்குமிடையே இவ்வாரத்தில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தம், அந்நாட்டின் இறுதி அமைதி ஒப்பந்தத்திற்கு முன்னோடியாக அமைந்துள்ளது என்று அந்நாட்டுப் பேராயர் ஒருவர் கூறினார்.

இந்த ஒப்பந்தம் குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த கொலம்பிய ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Luis Augusto Castro Quiroga அவர்கள், இந்த ஒப்பந்தத்தின் அடிப்படைக் கூறுகளை உணர்ந்துள்ள குடிமக்கள் இதனை முக்கியமானதாக நோக்குகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த செவ்வாயன்று கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா. அதிகாரிகள், கொலம்பியாவில் 51 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுச் சண்டையில் பல்வேறு வன்முறைகளில் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் நிலை உணரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை போன்ற கடும் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்குவது இந்த ஒப்பந்தத்தில் அகற்றப்பட்டுள்ளது என்றும் ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொலம்பியாவில் கடந்த 51 ஆண்டுகளாக நடந்துவரும் உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் கடந்த இரு ஆண்டுகளாக அரசுக்கும், அந்நாட்டின் FARC புரட்சிக் குழுவுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இச்சண்டையில் ஏறத்தாழ 25 இலட்சம் மக்கள் பலியாகியுள்ளனர்.   

ஆதாரம் : Fides / UN/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.