2015-12-04 15:56:00

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழ உதவ வேண்டும்


டிச.04,2015. டிசம்பர் 03, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், உலகில் ஏறக்குறைய ஓரங்கட்டப்பட்ட நிலையில் நூறு கோடி மாற்றுத் திறனாளிகளும் சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழ்வதற்கு வழி அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அனைவரையும் உள்ளடக்கிய உறுதியான உலகை அமைப்பதற்கு, எவ்வித பாகுபாடுமின்றி மனிதர் எல்லாரும் சமூகத்தில் ஒன்றிணைக்கப்பட்ட வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு அனைவரின் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றும் பான் கி மூன் அவர்கள் தனது செய்தியில் கூறியுள்ளார்.

உலக மாற்றுத் திறனாளிகள் நாள் 1992ம் ஆண்டிலிருந்து டிசம்பர் 3ம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.