2015-12-04 15:44:00

தூய்மையற்ற உணவால் ஏற்படும் நோயால் 4,20,000 பேர் இறப்பு


டிச.04,2015. தூய்மையற்ற உணவை உண்பதால் ஆண்டுதோறும் இறக்கும் 4 இலட்சத்து இருபதாயிரம் பேரில், ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதியினர் ஐந்து வயதுக்குட்பட்ட சிறார் என்று WHO உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது. 

உலகில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படும் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு  தூய்மையற்ற உணவே காரணம் என்று, தூய்மையற்ற உணவு குறித்த புதிய அறிக்கையை வெளியிட்ட WHO நிறுவன இயக்குனர் மார்கிரட் சான் அவர்கள் கூறினார்.

உணவை மாசடையச் செய்யும் நுண்கிருமிகள், வேதியப் பொருள்கள் மற்றும் பிற கிருமிகளே நோய்களுக்குக் காரணம் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

மாசடைந்த உணவை உண்பதால் உலகில் பத்துப் பேருக்கு ஒருவர் வீதம், அல்லது ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய அறுபது கோடிப் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

ஆதாரம் : UN/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.