2015-12-02 15:06:00

கடுகு சிறுத்தாலும் – எண்ணுவது ஏற்புடையதாக இருக்கட்டும்


ஒரு நாள் அக்பர், தன் அமைச்சர்களைச் சோதிக்க எண்ணி, யாரும் எதிர்பாராத கேள்வி ஒன்றை வினவினார். "என் அமைச்சர்கள் இப்போது மனதில் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா?" என்பதே அந்தக் கேள்வி.

முக்கியமான அரசவை நேரமானதால், ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு விதமான சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.  அதை அப்படியே மன்னரிடம் சொல்ல எல்லாரும் தயங்கினார்கள்.

பீர்பால் எழுந்து, "பேரரசர் அவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும், அவர் நாடு இன்னும் செழிப்பாக வளர வேண்டும் என எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். சந்தேகம் இருந்தால் எல்லாரையும் கேட்டுப் பாருங்கள்" என்றார். மனதில் அவ்வாறு எண்ணவில்லை என்றாலும் அவர் கூறியதை மறுக்க அங்கே யாருக்கும் துணிவில்லை! 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.