2015-11-06 16:36:00

வத்திக்கான் வழங்கிய தீபாவளி வாழ்த்துக்கள்


நவ.06,2015. தீபாவளி விழாவைக் கொண்டாடும் அனைவரும் தங்கள் குடும்பங்களிலும், சமுதாயத்திலும் மகிழ்வை உணர இவ்விழா உதவுவதாக என்ற வாழ்த்துரையை, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran அவர்கள், இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 11, வருகிற புதனன்று கொண்டாடப்படும் தீபாவளிப் பெருவிழாவை முன்னிட்டு, திருப்பீட பல்சமய உரையாடல் அவை வெளியிட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதியுள்ள 'இறைவா உமக்கே புகழ்' என்ற திருமடலின் எண்ணங்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன.

நாம் எந்த மதத்தைச் சார்ந்தவராயினும், இயற்கை வளங்களை அழித்துவரும் சுய நலத்திலிருந்து விடுதலை பெற்று, இவ்வுலகம் என்ற இல்லத்தைக் காக்கும் பொறுப்பு பெற்றவர்கள் என்பதை, தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார், கர்தினால் Tauran.

இயற்கையோடு நாம் கொள்ளும் நல்லுறவு, மனிதர்கள் நடுவில் திகழவேண்டிய நல்லுற வையும் உறுதிப்படுத்தும் என்று இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.