2015-11-03 16:09:00

இந்தியாவில் நிமோனியாவால் 4 இலட்சம் குழந்தைகள் உயிரிழப்பு


நவ.03,2015. இந்தியா முழுவதும், நான்கு இலட்சம் குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ள  நிமோனியா எனும் வைரஸ் காய்ச்சலை தடுக்கவேண்டும் என, இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒரு வயது முதல், ஐந்து வயது வரையிலான, குழந்தைகளை தாக்கும், நிமோனியா, குழந்தைகளின் சுவாச மண்டலத்தையும், நுரையீரலையும் பாதிக்கும் நோயாகும்.

இந்த ஆண்டில் மட்டும், இதுவரையில், நான்கு இலட்சம் குழந்தைகள் இறந்துள்ளதை, உலக அளவில் ஒப்பிடும்போது, மொத்த இறப்புகளில் (59 இலட்சம்), இது, 20 விழுக்காடாகும்.

உலக அளவில், நிமோனியாவால் ஏற்படும் உயிரிழப்புகள், இந்தியாவில் தான் அதிகமாக உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நோயை தடுப்பூசி போட்டு தடுக்க முடியும் என்ற வசதி இருந்தும், ஒரு வயது முதல், ஐந்து வயது வரையிலான குழந்தைகள், தொடர்ந்து மரணமடைவது குறித்த கவலையும் இந்திய குழந்தைகள் நல மருத்துவர் சங்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இம்மாதம் 12ம் தேதி, உலக நிமோனியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. 

ஆதாரம் : Dinamalar / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.