அக்.,31,2015. 'வீண் தற்பெருமை நம்மை இறைவனிடமிருந்து விலக்கி வைப்பது மட்டுமல்ல, நம்மை ஒரு கேலிப்பொருளாக தோற்றமளிக்கவும் வைக்கிறது' என இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
@pontifex என்ற முகவரியில் திருத்தந்தை வழங்கும் டுவிட்டர் செய்திகள் ஒவ்வொரு நாளும், இத்தாலியம், இஸ்பானியம், ஆங்கிலம், அரேபியம், பிரெஞ்சு, ஜெர்மனி, போலந்து, போர்த்துகீசியம், இலத்தீன் ஆகிய 9 மொழிகளில் வெளியாகின்றன.
மேலும், இச்சனிக்கிழமையன்று, முன்னாள் யுக்கோஸ்லாவிய குடியரசான மசடோனியாவின் அரசுத்தலைவர் Gjorge Ivanov அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |