2015-10-31 16:26:00

அரசோடு இணைந்து, புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் பிரான்ஸ் ஆயர்கள்


அக்.31,2015. புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அரசு வரவேற்க முன்வந்துள்ள நிலையில், அந்நாட்டு அனைத்து மறை மாவட்டங்களும் அரசின் முயற்சிகளோடு இணைந்து பணியாற்றவேண்டும் என்று, பிரான்ஸ் ஆயர் பேரவை விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளது.

புலம் பெயர்ந்தோரின் பிரச்சனை தீவிரமடைந்துள்ள இன்றையக் காலக் கட்டத்தில், ஏனைய மேற்கு ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து, தாங்களும், மேலும் 30,000 புலம் பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்ள உள்ளதாக பிரான்ஸ் நாடு அறிவித்துள்ளதைக் குறித்து தங்கள் மகிழ்வை வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஆயர் பேரவை, அனைத்து மறைமாவட்டங்களின் ஒத்துழைப்பிற்கும் உறுதி வழங்கியுள்ளது.

கிறிஸ்தவர்களின் புனித வரலாறு, புலம் பெயர்ந்தவரான ஆபிரகாமில் தொடங்கி, நாடு கடத்தல், சொந்த நாட்டிற்காக ஏங்குதல் ஆகிய வரலாறுகளைத் தாண்டி, தலைசாய்க்கவும் இடமில்லை என்று அறிவித்த இயேசுவில் தன் மையத்தைக் கொண்டுள்ளது என்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

ஆதாரம் : EWTN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.