2015-10-28 16:11:00

சிங்கப்பூரில் பகிர்ந்து வாழும் கிராமம்


அக்.28,2015. ஏழைகள், நோயாளிகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு உதவும் நோக்கத்தில் சிங்கப்பூரில் பகிர்ந்து வாழும் கிராமம் (Agape Village) ஒன்றை உருவாக்கியுள்ளது சிங்கப்பூர் காரித்தாஸ் நிறுவனம்.

இந்தப் பகிர்ந்து வாழும் கிராமம் வழியாக, சிங்கப்பூர் கத்தோலிக்கத் திருஅவையின் நலவாழ்வுப் பணிகளின் தரம் உயரும் என்று, சிங்கப்பூர் காரித்தாஸ் நிறுவனத்தின் தன்னார்வப் பணியாளர் திருமதி Winifred Loh அவர்கள் தெரிவித்தார்.

இப்புதிய கிராமம், வருகிற நவம்பர் 21ம் தேதி முழுமையாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதியம் குறைவாக உள்ள குடும்பங்கள், நெருக்கடியில்  வாழும் இளையோர், மன மற்றும் உடலளவில் பாதிக்கப்பட்டவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், முன்னாள் கைதிகள், வெளிநாட்டுப் பணியாளர்கள் போன்றோருக்கு இக்கிராமம் உதவி செய்யும்.

சிங்கப்பூரில் 2 இலட்சத்துக்கு மேற்பட்டோர் கத்தோலிக்கர். இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 5 விழுக்காடாகும்.  

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.