2015-10-27 15:27:00

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருத்தந்தை செபம்


அக்.27,2015. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் கடும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த மக்களுக்குத் தனது செபங்களைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் செபங்களையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்து பாகிஸ்தான் திருப்பீடத் தூதர் பேராயர் Ghaleb Bader அவர்களுக்கு, திருத்தந்தையின் பெயரால் தந்திச் செய்தி அனுப்பியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

மீட்புப் பணிகளிலும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கும் தனது செபத்தைத் தெரிவித்துள்ளதோடு, அவர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் திருத்தந்தை.

பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் இத்திங்களன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 1,500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் வட கிழக்கில் உள்ள படாக்ஷான் மாநிலம், ஜுர்ம் என்ற இடத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. பூமிக்குக் கீழே 213.5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.