2015-10-27 16:06:00

2015ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதிகமான வெப்பம்


அக்.27,2015. இப்பூமி, இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதிகமான வெப்பம் நிறைந்ததாய் பதிவு செய்யப்பட்டுள்ளதாக WMO என்ற ஐ.நா.வின் உலக வானிலை ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளாவிய காலநிலை குறித்து இத்திங்களன்று அறிக்கை வெளியிட்ட WMO வானிலை ஆய்வு நிறுவனம், கடந்த 136 ஆண்டுகளில், கடந்த செப்டம்பரில் காற்று மற்றும் கடலின் வெப்பம் மிக அதிகமாக இருந்தது என்று கூறியுள்ளது.

கடந்த செப்டம்பரில் காற்று மற்றும் கடலின் வெப்பம் 0.90 டிகிரி செல்சியுசாக இருந்தது என்றும், தென் அமெரிக்கா முழுவதிலும், இன்னும், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு, ஐரோப்பா, ஆசியா ஆகிய பகுதிகளின் சில இடங்களிலும் இந்தக் கடும் வெப்பம் உணரப்பட்டது என்றும் WMO நிறுவனம் கூறியுள்ளது.

பாரிசில் நடைபெறவிருக்கும் காலநிலை மாற்றம் குறித்த உச்ச மாநாட்டையொட்டி வருகிற நவம்பரில் உலகளாவிய காலநிலை குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்றும் WMO நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.