2015-10-24 16:04:00

அன்னைமரியாவின் ஆன்மீகத் தாய்மை விசுவாச சத்தியமாக அறிவிக்க...


அக்.24,2015. அன்னை மரியாவின் ஆன்மீகத் தாய்மை விசுவாச சத்தியமாக அறிவிக்கப்பட்ட வேண்டுமென்று குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தில் பரிந்துரைத்துள்ளார் உருகுவாய் நாட்டு Minas ஆயர் Jaime Fuentes.

அன்னை மரியா, அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் தாய் என்பதை ஏற்று, அந்த நம்பிக்கையை கிறிஸ்தவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் வகையில், அவரின் ஆன்மீகத் தாய்மை விசுவாச சத்தியமாக அறிவிக்கப்பட்ட வேண்டுமென்று கூறினார் ஆயர் Jaime Fuentes.

இப்புதிய விசுவாச அறிக்கைக்காக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், அனைத்துக் கிறிஸ்தவத் தலைவர்களும் உழைக்கலாம் என்றும், இது குறித்த பொது மக்களின் நிலைப்பாட்டை அறிய ஆவலாய் உள்ளேன் என்றும் கூறினார் ஆயர் Jaime Fuentes.

மரியா திருத்தலங்களுக்கு அதிகமான பக்தர்கள் செல்வதை பல ஆண்டுகளாக நாம் கவனித்து வருகிறோம், லூர்து அன்னை, பாத்திமா அன்னை, Guadalupe, Medjugorje, Salta (Argentina) போன்ற திருத்தலங்களுக்கு இலட்சக்கணக்கில் மக்கள் செல்கின்றனர், இயேசுவிடம் செல்வதற்கு அன்னை மரியா நுழைவாயிலாக இருக்கிறார் என்றும் கூறினார் உருகுவாய் ஆயர் Jaime Fuentes.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.