அக்.23,2015. பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு ஆகிய மூன்றையும் இணைத்து புதிய திருப்பீட அவையை உருவாக்கியிருப்பதாக இவ்வியாழன் மாலையில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குடும்பம் பற்றிய 14வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இவ்வியாழன் மாலை பொது அமர்வின் தொடக்கத்தில் இதனை அறிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதிய அவை, திருப்பீட பொது நிலையினர் மற்றும் குடும்ப அவைகளுக்குப் பதிலாகச் செயல்படும் என்று கூறினார். இப்புதிய அவையோடு, பாப்பிறை வாழ்வுக் கழகமும் இணையும் என்றும் திருத்தந்தை அறிவித்தார்.
பொதுநிலையினர், குடும்பம், வாழ்வு ஆகிய மூன்றையும் இணைத்து இயங்கும் இப்புதிய அவை, திருஅவை சட்டப்படி இயங்குவதற்குரிய விதிமுறைகளைத் தயாரிப்பதற்கு சிறப்பு குழு ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும், இந்த விதிமுறைகள் அடங்கிய ஏடு, வருகிற டிசம்பரில் நடைபெறும் கர்தினால்கள் அவை கூட்டத்தில் விவாதத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் என்றும் திருத்தந்தை அறிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |