2015-10-19 16:06:00

14வது உலக ஆயர்கள் மாமன்றம்:பத்திரிகையாளர் சந்திப்பு அக்.19


அக்.19,2015. வத்திக்கானில் இம்மாதம் 4ம் தேதி முதல் இடம்பெற்றுவரும் குடும்பம் குறித்த 14வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் இத்திங்களன்று மூன்றாவது வாரத்தைத் தொடங்கியுள்ளனர்.

இத்திங்களன்று சிறிய குழுக்களாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ள மாமன்றத் தந்தையர், மாமன்றத்தின் இறுதி அறிக்கையில் தாங்கள் விரும்பும் மாற்றங்கள் குறித்தும் விவாதித்து வருகின்றனர்.

இத்திங்கள் பிற்பகல் ஒரு மணிக்கு இடம்பெற்ற இம்மாமன்றம் குறித்த பத்திரிகையாளர் கூட்டத்தில், திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்களுடன், எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை Fouad Twal,  ஆஸ்திரேலியாவின் Brisbane பேராயர் Mark Benedict Coleridge, இத்தாலியின் பார்மா ஆயர்  Enrico Solmi ஆகியோரும் கலந்துகொண்டு பத்திரிகையாளரின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.

இச்செவ்வாய் மாலை, புனித சபினா துறவு இல்லத்தில், தொமினிக்கன் துறவு சபை ஆரம்பிக்கப்பட்டதன் 800ம் ஆண்டு நிறைவு குறித்த நிகழ்வு நடைபெறும் எனவும் அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.