2015-10-08 15:54:00

ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை பார்வை இழக்கிறது


அக்.08,2015. பார்வைக் கோளாறு சிகிச்சை மற்றும் மூக்குக் கண்ணாடி வாங்குவதற்கான அடிப்படை வசதிகள் இல்லாமையால் வளரும் நாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான சிறார் பார்வைத்திறனை இழக்கும் ஆபத்தை எதிர்நோக்குகின்றனர் என்று WHO உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.

அக்டோபர் 08, இவ்வியாழனன்று 16வது உலக பார்வை தினம் கடைப்பிடிக்கப்பட்டதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள WHO நிறுவனம், குழந்தைப்பருவ கண்பார்வை இழப்பு தொடர்ந்து இடம்பெறுவதாகவும், ஒவ்வொரு நிமிடமும் ஒரு குழந்தை பார்வையை இழக்கின்றது எனவும் கூறியுள்ளது.

குழந்தைப் பருவ பார்வை இழப்புகளில் நாற்பது விழுக்காட்டை அறுவை சிகிச்சை வழியாகச் சரிசெய்ய முடியும் என்றும், இவ்வாறு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், கண் பார்வையிழக்கும் சிறாரில் அறுபது விழுக்காட்டுச் சிறார், ஒரு வயதிற்குள்ளே இறந்து விடுவார்கள் என்றும் WHO எச்சரித்துள்ளது.

பார்வைக் கோளாறு சிகிச்சை மற்றும் மூக்குக் கண்ணாடி வாங்குவது உலகின் சில பகுதிகளில் வழக்கமான ஒன்றாகவும், மற்ற பகுதிகளில் இந்நிலை அரிதாகவும் காணப்படுவதாகவும் ஃபீதெஸ் செய்தி நிறுவனம் கூறுகின்றது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.