2015-10-02 15:05:00

கடுகு சிறுத்தாலும் - அறியாமல் செய்கிறார்கள்...


திருமணத்திற்கு நாள் குறிக்க, ஓர் இளைஞன், பங்குத்தந்தையைத் தேடிச் சென்றார்.  பொதுவாக, கிறிஸ்தவத் திருமணங்களுக்கு முன்னால், மாப்பிள்ளை, பெண் இருவருக்கும் மறைகல்வி எவ்வளவு தெரிந்திருக்கிறதென பங்குத்தந்தை சோதிப்பார். எனவே, திருமணத் தேதியைக் குறிக்க வந்த இளைஞனிடம், பங்குத்தந்தை, “இயேசு, திருமணத்தைப்பற்றி ஏதாவது சொல்லியிருக்கிறாரா?" என்று கேட்டார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த அவ்விளைஞன், "ம்.. சொல்லியிருக்கார் சாமி" என்று கூறவே, பங்குத்தந்தை, "என்ன சொல்லியிருக்கிறார்?" என்று அடுத்தக் கேள்வியைத் தொடுத்தார். அவர் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலோடு பங்குத்தந்தை காத்திருந்தார். இளைஞன், சிறிதும் தயக்கமின்றி, “‘தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள்’ என்று இயேசு சொல்லியிருக்கிறார்" என்று பெருமையுடன் சொல்லி முடித்தார். பங்குத்தந்தை அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்.

குடும்ப வாழ்வின் அடித்தளமான திருமணத்தை அறிந்து செய்கிறோமா? அறியாமல் செய்கிறோமா? எவற்றையெல்லாம் அறிந்து செய்கிறோம்? எவற்றையெல்லாம் அறியாமல் செய்கிறோம்? இவை, நாம் சிந்திக்கவேண்டிய கேள்விகள்...

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.