2015-09-29 16:04:00

நிலையான வளர்ச்சிக்கு முக்கியம் குடும்பம் ,பேராயர் கல்லகெர்


செப்.29,2015. சமுதாயத்தின் இயல்பான மற்றும் அடிப்படைக் கூறாக அமைந்துள்ள குடும்பம், சமுதாயத்தின் நிலையான வளர்ச்சியில் முதலிடத்தைக் கொண்டிருக்கின்றது என்று, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு கல்லகெர் அவர்கள் ஐ.நா.வில் கூறினார்.

2015ம் ஆண்டுக்குப் பின்னான ஐ.நா.வின் வளர்ச்சித்திட்டக் கொள்கைகள் குறித்த ஐ.நா. உச்சி மாநாட்டில் உரையாற்றிய பேராயர் கல்லகெர் அவர்கள், நாடுகள் மற்றும் அனைத்துலக நிறுவனங்களின் மத்தியில் ஒன்றிப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் குடும்பம் எடுத்துக்காட்டாய் உள்ளது என்றும் கூறினார்.

குடும்பங்கள் மீது அக்கறை கொண்டு செயல்பட்டால், ஏழ்மை குறைப்புக்கும், சிறாரைச் சிறந்தவர்களாக வளர்ப்பதற்கும் அது உதவும் என்றும் கூறினார் பேராயர் கல்லகெர்.

மதங்களையும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதற்குக் கொண்டிருக்கும் உரிமைகளையும் மதித்தல் உட்பட குடும்பங்களுக்கு ஆதரவான கொள்கைகள் வகுக்கப்படுவது, அமைதியான சமூகங்களை உருவாக்குவது உட்பட வளர்ச்சித்திட்ட இலக்குகளை எட்டுவதற்கு மிகவும் உதவும் என்றும் கூறினார் பேராயர் கல்லகெர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.