2015-09-26 15:36:00

ஐ.நா. நிறுவனப் பணியாளர்களுக்கு திருத்தந்தை ஆற்றிய உரை


செப்.26,2015. ஐ.நா. நிறுவனப் பணியாளர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை, ஐ.நா. நிறுவனத்திற்குப் பல்வேறு வழிகளில் முதுகெலும்பாக இருந்து பணியாற்றி வரும் நீங்கள் ஆற்றும் பணிகளில் பெரும்பகுதி செய்திகளாக வெளியே வருவதில்லை. களப்பணிகள், மொழிபெயர்ப்பு, செயலர், பாதுகாப்பு, நிர்வாகம் என உங்களின் அமைதியும், அர்ப்பணமும் நிறைந்த பலதரப்பட்ட பணிகள் ஐ.நா. நிறுவனத்தின் உயர்வுக்கு மட்டுமல்லாமல், உங்களின் தனிப்பட்ட வாழ்வுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உங்களில் பலர் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். உங்கள் ஒவ்வொருவரின் திறமைக்கேற்ப ஒருவர் ஒருவரை அன்புகூர்ந்து, மதித்து, அமைதிக்காவும், அமைதியிலும், நீதிக்காவும், நீதி உணர்விலும் ஐ.நா. ஆற்றும் பணிகளுக்கு எடுத்துக்காட்டாய் விளங்குங்கள். அன்பு நண்பர்களே, உங்களையும், உங்கள் குடும்பங்களையும் ஆசிர்வதிக்கிறேன். எனக்காகச் செபியுங்கள். செபிக்க இயலாதவர்கள் எனக்கு நல்வாழ்த்துக் கூறுங்கள் என்று ஐ.நா. நிறுவனப் பணியாளர்களுக்கு உரையாற்றினார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.