2015-09-19 16:32:00

புகைபிடித்தல் காரணமாக ஆண்டிற்கு 30 ஆயிரம் இலங்கையர் மரணம்


செப்.,19,2015. புகைபிடித்தல் காரணமாக இலங்கையில் ஆண்டிற்கு 30 ஆயிரம் பேர் வரையில் உயிரிழப்பதாக அந்நாட்டு நலத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் சேனாரத்ன அவர்கள், தந்தையர் புகைப்பிடிப்பதன் காரணமாக உயிரிழக்கும் குழந்தைகளும் அவர்களுள் அடங்குவர் என சுட்டிக்காட்டினார்.

புகைத்தலற்ற சமூதாயம் ஒன்றை உருவாக்க அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனாவினால் மேற்கொள்ளப்படுகின்ற செயல்பாட்டை வலுவடைய செய்வதாக தன் நடவடிக்கைகள் இருக்கும் என அவர் மேலும் கூறினார். 

ஆதாரம் :  TamilWin/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.