2015-09-12 15:13:00

மனிதாபிமான மதிப்பீடுகளுடன் வளர்ச்சிகள் முன்னெடுக்கப்படட்டும்


செப்.12,2015. மனித குலத்திற்கான சேவை மனப்பான்மையுடன், கிறிஸ்தவ மற்றும் மனிதாபிமான மதிப்பீடுகளுடன் மருத்துவ அறிவியல் வளர்ச்சிகள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் வெர்செல்லி எனுமிடத்தில், வட இத்தாலிய கத்தோலிக்க மருத்துவர்கள் நடத்தும் கருத்தரங்கிற்கு, திருப்பீடச்செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்களால் அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, ஒழுக்கக் கோட்பாடுகள், அறிவியல் வளர்ச்சி,  மற்றும் பொருளாதார ஆதாரங்களுக்கு இடையேயான மோதல்களையும், இணைப்பையும் சுட்டிக்காட்டியுள்ளது.

மதம் சாரா நிலைகளாலும், ஒப்பீட்டுக் கொள்கைகளாலும் பாதிக்கப்பட்டுள்ள இன்றைய நவீன சமூகத்திற்கு, கிறிஸ்தவ மதிப்பீடுகளையும், ஆன்மீகக் கூறுகளையும் எடுத்துரைக்க வேண்டிய கத்தோலிக்க மருத்துவர்களின் கடமையையும் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.