2015-09-09 17:01:00

பாகிஸ்தான் இஸ்லாமியரும் கொண்டாடும் அன்னை மரியாவின் திருநாள்


செப்.09,2015. செப்டம்பர் 8, இச்செவ்வாயன்று, பாகிஸ்தானில் மிரியாம்பாத் எனுமிடத்தில் அமைந்துள்ள அன்னை மரியாவின் திருத்தலத்தில் பல்லாயிரம் பக்தர்கள் கூடியிருந்தனர் என்று UCAN செய்தி கூறுகிறது.

லாகூர் உயர் மறைமாவட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள மிரியாம்பாத் கிராமத்தில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம் கடந்த 66 ஆண்டுகளாக கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்ற இரு சமயத்தவரையும் ஈர்த்து வருகிறது என்றும் UCAN செய்தி மேலும் கூறுகிறது.

செப்டம்பர் 4 முதல் நான்கு நாட்கள் நடைபெற்ற திருத்தல நிகழ்வுகளில், மொத்தமாக 4,00,000த்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர் என்று, திருத்தல ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான, அருள்பணி Mushtaq Mushtaq Pyara அவர்கள் UCAN செய்தியிடம் கூறினார்.

இஸ்லாமிய, மற்றும் கிறிஸ்தவப் பாரம்பரியங்களில் சிறப்பான இடம்பெற்றுள்ள மரியா, இரு சமயங்களின் பக்தர்களையும் ஈர்ப்பது ஆச்சரியம் தரும் செய்தியல்ல என்று அருள்பணி Pyara அவர்கள் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.