2015-09-08 16:48:00

புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் திருத்தந்தையின் டுவிட்டர்


செப்.08,2015. "ஐரோப்பாவின் ஒவ்வொரு பங்குத்தளமும் துறவு சபையும் புலம்பெயர்ந்தோர் ஒருவரின் குடும்பத்தை வரவேற்கட்டும். ஜுபிலி ஆண்டு, புலம் பெயர்ந்தோர் வருக" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டுள்ளார்.

அன்னை மரியாவின் பிறந்தநாளும், ஆரோக்கிய அன்னையின் திருவிழாவுமான இச்செவ்வாய்க் கிழமையன்று, புலம் பெயர்ந்தோர் மீது நாம் கொள்ளவேண்டிய அக்கறை குறித்து, திருத்தந்தை வெளியிட்டுள்ள இச்செய்தி, கடந்த ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின்போது, அவர் விடுத்த விண்ணப்பத்தின் தொடர்ச்சியாக உள்ளது.

@Pontifex என்ற முகவரி வழியே, ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் செய்திகளை வெளியிட்டுவரும் திருத்தந்தை, இதுவரை, 654 டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார் என்பதும், அவரது டுவிட்டர் பக்கத்தை, 70,24,892 பேர் தொடர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.