2015-09-07 17:07:00

'அனைத்துலக விசாரணை' கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை


செப்.07,2015. இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற குற்றங்கள் தொடர்பில், அனைத்துலக விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக, அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'அனைத்துலக விசாரணை வழிமுறைக்கான தமிழர் செயல்பாட்டு அமைப்பின்', இந்தக் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில அவை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும், பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இணைந்துள்ளனர்.

செப்டம்பர் 16ம் தேதி வரை இந்தக் கையெழுத்து வேட்டை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.